ADDED : டிச 28, 2025 05:31 AM
அ நிறம் | அளவு
பாகூர்: கிருமாம்பாக்கம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, முள்ளோடை - பரிக்கல்பட்டு சாலையில் உள்ள பெட்டி கடைகளில், சோதனை செய்தனர். இதில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
கடை உரிமையாளர் காட்டுக்குப்பத்தை சேர்ந்த ஜெயந்தி 45; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.
