ADDED : ஏப் 09, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த உரிமை யாளரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் திருப்பட்டினம் நிரவி பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் போலீசார் நிரவி பூசைமண்டபம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் குட்கா பொருட்கள் இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்னர் விசாரணையில் விழுப்புரம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம், 43; என்பவரை நிரவி போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

