
புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமையில் நடந்தது.
எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில், 35க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து, பொதுமக்கள் தவறவிட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 25 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா கூறுகையில், 'சமூக வலைதளமான வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுக்களில் தெரியாத சில நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம். மும்பை போலீஸ், சி.பி.ஐ.,யில் இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு அழைப்புகள் வரலாம். அதுவும் மோசடிக்காரர்கள் உங்களை பயமுறுத்தி பணத்தைப் பறிக்கும் முயற்சியாகும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.