sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மழையால் பாதித்த நெற்பயிர்கள் காரைக்காலில் அறுவடை தீவிரம்

/

மழையால் பாதித்த நெற்பயிர்கள் காரைக்காலில் அறுவடை தீவிரம்

மழையால் பாதித்த நெற்பயிர்கள் காரைக்காலில் அறுவடை தீவிரம்

மழையால் பாதித்த நெற்பயிர்கள் காரைக்காலில் அறுவடை தீவிரம்


ADDED : பிப் 04, 2025 06:14 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு, திருப்பட்டினம், திருநள்ளாறு, அம்பகரத்தூர், கோட்டுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 12,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்து, தற்போது பல்வேறு இடங்களில் அறுவடை செய்ய விவசாயிகள் தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது.

தற்போது திருநள்ளாறு, நெடுங்காடு, அம்பகரத்துார் உள்ளிட்ட பகுதிகளில், நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

சில இடங்களில், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்கு வயல்கள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல் , மழையால் சேதமடைந்துள்ளது.

ஒரு பக்கம் கடன் பிரச்னையும், மற்றொரு பக்கம் மழையும் பெய்து பாதிப்பதாக ஏற்படுத்தியுள்ளதால் அறுவடை செய்யும் நெல்லை, தடையின்றி அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us