ADDED : ஏப் 03, 2026 05:35 AM

பாகூர்: பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக மருந்தியல் கல்லுாரி சார்பில், மணமேடு கிராமத்தில், காச நோய் குறித்த சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, நடந்த முகாமிற்கு மருந்தியல் நடைமுறைத் துறை பேராசியர் ராமம் ஸ்ரீபாதா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் வான்மதி மற்றும் முதுநிலை மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.
காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
நிகழ்சிக்கு வழிகாட்டிய பல்கலைக்கழக கவுரவ வேந்தர் ராஜகோபாலன், துணை வேந்தர் பாலகிருஷ்ணா பி.ஷெட்டி, பதிவாளர் ஸ்ரீநிவாசன், மருத்துவமனை மற்றும் வெளிப்பணி சேவைகள் இயக்குநர் நிர்மல்குமார், மருத்துவ சேவைகள் இயக்குநர் ஸ்வாதி ஜே பவார், மருந்தியல் கல்லுாரி முதல்வர் சண்முகநாதன், அனுமதி வழங்கிய சுகாதார துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

