/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் 2வது நாளாக போராட்டம்
/
சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் 2வது நாளாக போராட்டம்
ADDED : பிப் 12, 2025 03:38 AM
புதுச்சேரி: சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் நல சங்கம் சார்பில், பணி வழங்க வலியுறுத்தி 2வது நாளாக குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சுகாதாரத்துறையில், பணியின்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, ஆண்டுதோறும் ஏற்படும் காலி பணியிடங்களில், 5 சதவீதம் பணி வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக பணி வழங்கப்படவில்லை.
இதனால், புதுச்சேரி சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் நல சங்கம் சார்பில், துறை இயக்குநர் அலுவலகம் எதிரே, அனைத்து வாரிசுதாரர்களுக்கும் ஒருமுறை தளர்வு அளித்து, கருணை அடிப்படையில், வாரிசுதாரர் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி, நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர்.
தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும்,சங்கத்தின் ஒருங்கிணைப்பார் டேவிட், இணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.