ADDED : நவ 10, 2024 04:37 AM
புதுச்சேரி : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊர்காவல் படை போலீசார் துாக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி நைனார்மண்டபம் குயவர் வீதியைச் சேர்ந்தவர் பொன்னியின் செல்வி. இவரது மகன் வசந்த் (எ)வினோத், 32; ஊர்காவல் படை வீரர்.
இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. வினோத் மீது ஆரோவில் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இதனால், மனமுடைந்த வினோத் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் துாக்க மாத்திரை சாப்பிட்டு வினோத் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.