ADDED : ஆக 17, 2026 11:53 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஓட்டல் உரிமையாளர் தற்கொலை விவகாரம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி, திருமுடி நகரை சேர்ந்தவர் முகமது நிஜாம், 61; இவர் அண்ணா சாலையில் ஒட்டல் கடை நடத்தி வந்தார்.
அதில், நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 11ம் தேதி காலை முகமது நிஜாம் எலி பேஸ்ட் சாப்பிட்டு, அன்று மதியம் பழைய துறைமுகம் அருகில் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
