sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவியிடம் பேசியவரை கொன்ற கணவர் கைது

/

மனைவியிடம் பேசியவரை கொன்ற கணவர் கைது

மனைவியிடம் பேசியவரை கொன்ற கணவர் கைது

மனைவியிடம் பேசியவரை கொன்ற கணவர் கைது


ADDED : நவ 03, 2025 12:05 AM

Google News

ADDED : நவ 03, 2025 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மனைவியுடன் மொபைல் போனில் பேசிய நண்பரை வெட்டி கொன்ற கணவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, உப்பளம் விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தில் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர், உழவர்கரையைச் சேர்ந்த லோடுமேன் சந்துரு, 24, என தெரிந்தது.

விசாரணையில், சந்துருவும், முருங்கப்பாக்கம் வெங்கடேஷ் என்பவரும் நண்பர்கள். வெங்கடேஷ், வம்பாகீரப்பாளையத்தில், மனைவி காவியா வீட்டில் வசித்தார். வெங்கடேஷ் வீட்டிற்கு சந்துரு சென்றபோது, காவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் மொபைல் போனில் பேசி வந்துள்ளனர். இதையறிந்த வெங்கடேஷ், சந்துருவை கண்டித்தார். அதன் பிறகும் சந்துரு பேசியதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த வெங்கடேஷ், நேற்று முன்தினம் மனைவியை, திருசெந்துார் கோவிலுக்கு அனுப்பிவிட்டு, வீட்டிற்கு சந்துருவை அழைத்து, நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது, சந்துருவை நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேஷ் வெட்டி கொன்றார். சந்துரு உடலை பாலத்தில் வீசியது தெரிந்தது.

ஒதியஞ்சாலை போலீசார், வெங்கடேஷ் உட்பட, மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us