ADDED : செப் 20, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் செய்தார்.
வீராம்பட்டினம் ஹார்பார் வீதியை சேர்ந்தவர் சக்திவேல், 56; இவர் மீன் பிடிக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த 1ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.