ADDED : ஜூலை 10, 2025 11:20 PM

புதுச்சேரி: உழவர்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு மற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சிவராம ரெட்டி தலைமை தாங்கினார். விழாவில், கல்வித்துறையின் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட, புதிய கட்டடத்தை சிவசங்கர் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். சமக்ர சிக் ஷா மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா வாழ்த்தி பேசினார்.
தலைமையாசிரியர் அமலோற்பவ மேரி, அலுவலக கண்காணிப்பாளர் துரைசாமி முன்னிலை வகித்தனர். விரிவுரையாளர் ஜெனார்த்தனன் வரவேற்றார். இதில், எம்.எல்.ஏ., அளித்த சொந்த நிதியின் மூலமாக மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் இலவசக் காலணிகள் வழங்கப்பட்டது.
விரிவுரையாளர் புஷ்பா, உடற்கல்வி ஆசிரியர் பழனிசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியை தவமணி நன்றி கூறினார்.