/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 44 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை
/
போலீஸ் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 44 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை
போலீஸ் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 44 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை
போலீஸ் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 44 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை
ADDED : ஜூலை 13, 2025 05:42 AM

புதுச்சேரி : காரைக்கால் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன்படி, காரைக்கால் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, எஸ்.பி., சுப்ரமணியன் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதேபோல், வில்லியனுார் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., வம்சீதர ரெட்டி, தன்வந்தரி நகரில் எஸ்.பி., வீரவல்லவன், முதலியார்பேட்டையில் எஸ்.பி., பக்தவாசலம், ஒதியஞ்சாலையில் எஸ்.பி., பழனிவேல், போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் எஸ்.பி.,க்கள் செல்வம் மற்றும் மோகன்குமார் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.
இதில், பொது மக்களிடம் இருந்து 97 புகார்கள் பெறப்பட்டு, 44 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் மன்றத்தில் 253 பேர் பங்கேற்று புகார்களை அளித்தனர்.