sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீஸ் மக்கள் மன்றத்தில் 31 புகார்களுக்கு உடனடி தீர்வு

/

போலீஸ் மக்கள் மன்றத்தில் 31 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 31 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 31 புகார்களுக்கு உடனடி தீர்வு


ADDED : மார் 23, 2025 03:59 AM

Google News

ADDED : மார் 23, 2025 03:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், எஸ்.பி., வம்சித ரெட்டி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி டி.ஜி.பி., உத்தரவின் பேரில், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடந்து வருகிறது.

அதன்படி, நேற்று காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் மேற்கு எஸ்.பி., வம்சித ரெட்டி தலைமை தாங்கி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தார். இதில், இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், பிரியா உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.

இதேபோல், கோரிமேடு நிலையத்தில் தெற்கு எஸ்.பி., பக்தவாசலம், ஒதியன்சாலை நிலையத்தில் கிழக்கு எஸ்.பி., ரகுநாயகம் தலைமையிலும், போக்குவரத்து வடக்கு நிலையத்தில் சீனியர் எஸ்.பி., பிரவீன் திரிபாதி, எஸ்.பி., செல்வம் தலைமையிலும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது.

இதில், பொதுமக்களிடம் இருந்து 67 புகார்கள் பெறப்பட்டு, அதில் 31 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us