sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை

/

 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை

 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை

 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை


ADDED : பிப் 16, 2026 06:58 AM

Google News

ADDED : பிப் 16, 2026 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, வி.வி.பி. நகர் பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் விழா நடந்தது.

லெனின் வீதி, கீர்த்தி மகாலில் நடந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.விழாவில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இளங்கோவன், இணைப் பதிவாளர் சாரங்கபரணி, துணைப் பதிவாளர் குணசேகரன், கூட்டுறவு அதிகாரி தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு, 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முறையே ரூ. 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் பரிசு வழங்கினர்.

தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விழாவில், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் குப்புராமன், இயக்குனர்கள் மருதாச்சலம், இளங்கோவன், கணேஷ், பெருமாள், லட்சுமணன், பூவரசன், வசந்தராஜன், ராஜேந்திரன், புஷ்ப சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குனர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us