/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருமான வரித்துறை அலுவலகம் திறப்பு விழா
/
வருமான வரித்துறை அலுவலகம் திறப்பு விழா
ADDED : மார் 11, 2026 04:09 AM

புதுச்சேரி: புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள பி.எஸ்.என்.எல்., கட்டடத்தில் வருமான வரித்துறையின் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
புதிய அலுவலகத்தை சென்னை வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் சுதாகர ராவ் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வருமான வரித்துறையின் மூத்த அதிகாரிகள் பத்மஜா, ஷாகீர் ஹுசைன், ஜக்தீஷ் சந்த்ரகர், சென்னை கூடுதல் வருமான வரி ஆணையர் வீரமணி, புதுச்சேரி கூட்டு வருமான வரி ஆணையர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதன்மை தலைமை ஆணையர் சுதாகர ராவ் பேசுகையில், '2022ம் ஆண்டு வருமான வரித்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட இந்த கட்டடத்தை புதுப்பிக்க ஒத்துழைப்பு வழங்கிய பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளுக்கு நன்றி. வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி சட்டம் - 2025, ஆறு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டம், 1961க்கு மாற்றாக அமலுக்கு வரும் இந்த புதிய சட்டம், காலாவதியான பிரிவுகளை நீக்கி, சட்டத்தை சுருக்கமாக மறுசீரமைத்து, எளிய மற்றும் தெளிவான மொழியில் வடிவமைப்பதன் மூலம் வரி அமைப்பை எளிமைப்படுத்தும்' என்றார்.

