ADDED : ஆக 16, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி வருமான வரித் துறை சார்பில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
வருமான வரி துறை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், சரக இணை ஆணையர் அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி, வைத்து மரியாதை செலுத்தினார். அலுவலக காவலர்களின் அணிவகுப்பு நடந்தது.
இதில், நிர்வாக அதிகாரி கிஷோர், வருமான வரி அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் கோவிந்தன், அலுவலக கண்காணிப்பாளர் தயாநிதி உள்ளிட்ட அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

