ADDED : ஏப் 14, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இ.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், பொருளாளர் சுப்பையா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.