/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கம்யூ., போராட்டம் அறிவிப்பு
/
இந்திய கம்யூ., போராட்டம் அறிவிப்பு
ADDED : ஜன 24, 2026 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என, இந்திய கம்யூ., தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலச் செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை;
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 292 ஒப்பந்த ஆசிரியர்களை ஜனவரிக்குள் பணி நிரந்தரம் செய்வதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு காலம் கடத்தாமல் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தவறினால் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

