/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனை
/
எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனை
ADDED : மார் 20, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மடுகரை எல்லைப் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறையினர் மாநில எல்லைப் பகுதியில் சோதனை சாவடி அமைத்து, வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை 6:00 மணியளவில், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில், மடுகரை போலீசார், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, தேர்தலை முன்னிட்டு பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றனவா என, சோதனை செய்தனர்.

