ADDED : பிப் 23, 2026 04:26 AM

பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில், சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில், உலகத் தாய்மொழி நாள் விழா, மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடந்தது.
சங்க தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மருந்தாளுநர் கல்லுாரி மாணவி இசைமொழி வரவேற்றார். சங்க நிறுவனர் செவ்வி முன்னிலை வகித்தார். ஆலோசகர் தனராஜா நோக்கவுரையாற்றினார்.
கட்டட ஒப்பந்ததாரர் மாயக்கிருஷ்ணன், சமூக சேவகர் குப்புசாமி, பன்முக கலைஞர் சரவணன் வாழ்த்தி பேசினர். கொல்லிமலை வள்ளலார் அறக்கட்டளை நிறுவனர் கணேசன், செயலர் சுமிதா, கவிஞர் பிரகாஷ், தனசுந்தராம்பாள் அறக்கட்டளை தலைவர் ஆனந்தன் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி மகளிர் ஆணையத்தின் தலைவி நாகஜோ தி, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை மண்டல அமைப்பாளர்கள் மாதவி காவியா, மீரா, ஸ்ருதிஹாசினி, குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசுப் பள்ளி மாணவர்கள் செய்திருந்தனர். மண்டல அமைப்பாளர் பவித்ரா நன்றி கூறினார்.

