ADDED : டிச 22, 2024 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிள்ளைத்தோட்டம், டி.வி.,சாலையில், 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், கடந்த 17ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார், அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.