sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு :2 பேரிடம் ரூ.7.72 லட்சம் மோசடி 

/

போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு :2 பேரிடம் ரூ.7.72 லட்சம் மோசடி 

போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு :2 பேரிடம் ரூ.7.72 லட்சம் மோசடி 

போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு :2 பேரிடம் ரூ.7.72 லட்சம் மோசடி 


ADDED : ஜூலை 07, 2025 01:33 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து 2 பேர் ரூ.7.72 லட்சம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.

வில்லியனுாரை சேர்ந்த ஆண் நபரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான, வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்துள்ளார். அதில், வர்த்தகத்தில் எவ்வாறு முதலீடு செய்வது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அவர் மர்ம நபர் தெரிவித்த வர்த்தகத்தில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, போலி வர்த்தகத்தில் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், வில்லியனுாரை சேர்ந்த மற்றொரு ஆண் நபர் போலி ஆன்லைன் வர்த்தகத்தில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 350 ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றியுள்ளார்.

லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, 56 ஆயிரத்து 995 ரூபாய்க்கு லேப் டாப் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், இதுவரையில் லேப் டாப் வீட்டிற்கு வரவில்லை. இதேபோல், வில்லியனுாரை சேர்ந்த பெண் ஒருவர், 17 ஆயிரம் ரூபாய்க்கு ஆன்லைனில் லேப் டாப் ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார்.

அரியாங்குப்பத்தை சேர்ந்த ஆண் நபர், ஆன்லைனில் 5 ஆயிரம் ரூபாய்க்கு, விளையாட்டு பொருட்கள் ஆர்டர் செய்தும், புதுக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபர் 30 ஆயிரத்து 500, புதுச்சேரியை சேர்ந்த பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்த 59 ஆயிரம் என 7 பேர் 9 லட்சத்து 41 ஆயிரத்து 345 ரூபாய் ஏமாந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us