sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு : புதுச்சேரி நபரிடம் ரூ.1.13 கோடி மோசடி

/

 போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு : புதுச்சேரி நபரிடம் ரூ.1.13 கோடி மோசடி

 போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு : புதுச்சேரி நபரிடம் ரூ.1.13 கோடி மோசடி

 போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு : புதுச்சேரி நபரிடம் ரூ.1.13 கோடி மோசடி


ADDED : ஜன 16, 2026 07:10 AM

Google News

ADDED : ஜன 16, 2026 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து, மூலக்குளத்தை சேர்ந்தவர் ரூ. 1.13 கோடியை மோசடி கும்பலிடம் இழந்தார்.

புதுச்சேரி, மூலக்குளத்தை சேர்ந்தவர், ஆன்லைன் டிரேடிங் செய்ய விரும்பி சமூக வலைதளத்தில் தேடியுள்ளார். அப்போது, அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் டிரேடிங்கில் முதலீடு செய்து எப்படி திறமையாக சம்பாதிக்கலாம். அதிக லாபம் தரும் டிரேடிங் நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

அதை நம்பி, மர்ம நபர் தெரிவித்த வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளார். பிறகு, அந்த குழுவில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து தினசரி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர், மர்ம நபர் அனுப்பிய ஆன்லைன் டிரேடிங் லிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதன்மூலம் அவருக்கு வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, வருமான வரி, ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகே, மோசடி கும்பலிடம் போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், சொக்க நாதன்பேட்டை சேர்ந்தவர் 59 ஆயிரத்து 711, ரெயின்போ நகரை சேர்ந்தவர் 65 ஆயிரம், வடமங்கலத்தை சேர்ந்தவர் 75 ஆயிரம் என 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 74 ஆயிரத்து 711 இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us