/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நியமனத்தில் முறைகேடு: அரசு ஊழியர் சம்மேளனம் புகார்
/
பணி நியமனத்தில் முறைகேடு: அரசு ஊழியர் சம்மேளனம் புகார்
பணி நியமனத்தில் முறைகேடு: அரசு ஊழியர் சம்மேளனம் புகார்
பணி நியமனத்தில் முறைகேடு: அரசு ஊழியர் சம்மேளனம் புகார்
ADDED : மார் 20, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, :சுகாதாரத் துறையில் முறைகேடாக நடந்த பணி நியமனங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி சுகாதாரத் துறையில் போலி சான்றிதழ், காலாவதியான சான்றிதழ் அளித்து பணி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, வாரிசுதாரர் பணி நியமனத்தில் தவறுகள் நடந்துள்ளது குறித்தும் நடவடிக்கை தேவை.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்திலும் தகுதி இல்லாத நபரை, அவசர அவசரமாக தேர்வு செய்து உள்ளனர். முதல்வர், சுகாதாரத்துறை செயலர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

