/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவித் தொகைக்கான அரசாணை வழங்கல்
/
உதவித் தொகைக்கான அரசாணை வழங்கல்
ADDED : ஜன 30, 2026 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான அரசாணையை, சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார்.
தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மணவெளி தொகுதியை சேர்ந்த 144 பயனாளிகளுக்கு மாதாந்திர நிதி உதவிக்கான அரசாணையை, சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும், 75 முதியோர்கள் மற்றும் 65 விதவைகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையை, சபாநாயகர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சுகுமாரன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

