டெலிகிராமில் 'ஜனநாயகன்' மர்ம நபர்கள் மீது புகார்
டெலிகிராமில் 'ஜனநாயகன்' மர்ம நபர்கள் மீது புகார்
ADDED : ஏப் 13, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஜன நாயகன் திரைப்படம், டெலிகிராம் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாகப் பகிர்ந்த மர்ம நபர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந நபர் ஆன்லைன் டெலிகிராம் செயலியை பார்த்தார். அப்போது, திரைக்கு வராத ஜனநாயகன் திரைப்படத்தின் எச்.டி., பிரிண்ட், மர்ம நபர்களால் ஆன்லைன், டெலிகிராம் சேனல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இணைய தளத்தில் பரவி வரும் சட்டவிரோத லிங்குகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இந்தப் பதிப்புரிமை மீறலில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
