/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
/
வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
ADDED : டிச 27, 2024 06:08 AM
புதுச்சேரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் வேலை வாய்ப்பு முகாம் நாளை (28ம் தேதி) நடக்கிறது.
இதுகுறித்து, துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டண்சி சேவை மையம் சார்பில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை (28ம் தேதி) காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை நடக்கிறது.முகாமில், 9 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது தற்குறிப்பு மற்றும் கல்வி தகுதிக்கான அசல், நகல் சான்றிதழ்களுடன் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, பயன்பெறும் கேட்டு கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்பு முகாம் ரெட்டியார்பாளையம், புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் நடக்கிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.