/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காஞ்சி மாமுனிவர் மைய இயக்குநர் பொறுப்பேற்பு
/
காஞ்சி மாமுனிவர் மைய இயக்குநர் பொறுப்பேற்பு
ADDED : பிப் 21, 2026 05:18 AM

புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக சசிகாந்த தாஸ் பொறுப்பேற்றார்.
புதுச்சேரியில் உள்ள காஞ்சி மாமுனிவர் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக சசிகாந்த தாஸ் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றியவர். புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி மற்றும் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதல்வராக பணியாற்றியுள்ளார்.
அவரது தலைமையில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என்.ஏ.ஏ.சி. அங்கீகாரத்தில் 'ஏ' தரத்தை பெற்றது. சிறந்த நிர்வாக திறன் மற்றும் தலைமைத்துவத்திற்காக, 2024ம் ஆண்டு புதுச்சேரி அரசு அவருக்கு 'சிறந்த நிர்வாகி' விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

