sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 'பூமிக்கு ஆனந்தத்தை கொடுப்பவன் கண்ணன்' வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

/

 'பூமிக்கு ஆனந்தத்தை கொடுப்பவன் கண்ணன்' வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

 'பூமிக்கு ஆனந்தத்தை கொடுப்பவன் கண்ணன்' வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

 'பூமிக்கு ஆனந்தத்தை கொடுப்பவன் கண்ணன்' வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்


ADDED : நவ 16, 2025 03:31 AM

Google News

ADDED : நவ 16, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 'ஹரியே இப்பூலோகத்தில் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்து மக்களின் துன்பங்களைப் போக்கினார் என வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் செய்தார்.

ராமானுஜரின் 100ம் ஆண்டு வைபவத்தை முன்னிட்டு, கிஞ்சித்காரம் அறக்கட்டளையின் புதுச்சேரி கிளை மற்றும் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் இணைந்து நடத்தும் சிறப்பு உபன்யாசம் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு உபன்யாசத்தில் இரண்டாம் நாளான நேற்று 'ஹரே கிருஷ்ண' என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் செய்தார்.

அப்போது, 'ஹரியே இப்பூலோகத்தில் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்து மக்களின் துன்பங்களைப் போக்கினார். ஹரே கிருஷ்ண என்பது கண்ணன் பச்சை மற்றும் கருப்பு வண்ணத் துடையவன், கொடுக்கும் தன்மையுடைய வள்ளலவன், என்று கண்ணனின் பெருமைகளை விளக்கினார்.

கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணனின் விசேஷ தர்மத்தினை விளக்கி, சப்த, ரஜோ குணங்களின் பெருமை , தர்ம அனுஷ்டானங்கள் எவ்வாறு கடைப்பிடித்தல் போன்றவற்றை உபதேசித்தார். ராமனைப் பொறுத்த வரையில் தர்மத்தினை கடைப்பிடிப்பவர் என்றும், கிருஷ்ணர் 'நானே தர்மம்' என்று சொல்பவர்.

கண்ணன் பூமிக்கு ஆனந்தத்தை கொடுப்பவன் என்றும் கீதையில் நானே தர்மம் என்று சொன்னதை விவரமாக பல கல்யாண குணங்களை மேற்கோள்களை காட்டி விளக்கினார்.

முன்னதாக மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை புதுச்சேரி ஜெகதீசன் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. இ றுதி நாளான இன்று 16ம் தேதி மாலை 'ஹரே ஹரே 'எனும் தலைப்பில் உபன்யாசம் நடக்கிறது. அனுமதி இலவசம்.

உபன்யாசம் குறித்து தகவல் பெற விரும்புவோர் 94869 71962, 94430 85334, 88256 11581 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us