sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சமையல் கூடத்தில் திருட்டு : கடலுார் வாலிபர் கைது

/

சமையல் கூடத்தில் திருட்டு : கடலுார் வாலிபர் கைது

சமையல் கூடத்தில் திருட்டு : கடலுார் வாலிபர் கைது

சமையல் கூடத்தில் திருட்டு : கடலுார் வாலிபர் கைது


ADDED : செப் 01, 2025 06:59 AM

Google News

ADDED : செப் 01, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் அருகே சமையல் கூடத்தின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய, பிரபல திருடனை, பொது மக்கள் கையும் களவுமாக பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாலன் 37; இவர், பின்னாசிகுப்பம் வி.ஐ.பி. நகரில் கொட்டகை ஒன்று அமைத்து சமையல் கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் இந்த சமையல் கொட்டகையின் பூட்டை உடைத்து, மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார். இதனை பார்த்தவர்கள், இது குறித்து வீரபாலனுக்கு தகவல் தெரிவித்தனர்.

வீரபாலன் அங்கு வந்து பார்த்தபோது, வாலிபர் ஒருவர் சமையல் கூடத்தின் உள்ளே இருந்த பொருட்களை திருடி கொண்டிருந்தார்.

தப்பியோட முயன்ற அந்த வாலிபரை, பொது மக்கள் உதவியுடன் பிடித்து, பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம், அந்த வாலிபரை பொது மக்கள் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்த வாலிபர் கடலுார் அடுத்த கூத்தப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சுகன் (எ) சுகன்ராஜ் 26; என்பதும், இவர் மீது ஏற்கனவே புதுச்சேரி மற்றும் கடலுார் போலீஸ் நிலையங்களில் 5க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, வீரபாலன் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுகன்ராஜை கைது செய்து நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us