நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார், அம்பேத்கர் நகர் 4 வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம், 53; கூலித் தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் காலை ஒதியம்பட்டில் உள்ள செல்வநாதனுக்கு சொந்தமான நிலத்திற்கு வேலைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.