sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கூலி தொழிலாளி மர்ம மரணம்

/

 கூலி தொழிலாளி மர்ம மரணம்

 கூலி தொழிலாளி மர்ம மரணம்

 கூலி தொழிலாளி மர்ம மரணம்


ADDED : ஏப் 27, 2026 06:02 PM

Google News

ADDED : ஏப் 27, 2026 06:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் சுத்துக்கேணி செல்லும் சாலையில் விவசாய கூலி தொழிலாளி தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார்.

குமாரப்பாளையம், அமட்டன்குளம் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராம், 70; விவசாய கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய ஜெயராம், நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் குடிபோதையில் காட்டேரிக்குப்பம்- சுத்துக்கேணி செல்லும் சாலையோரம் உள்ள செடிகள் அடர்ந்த இடத்தில் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து, அவரது மகன் அளித்த தகவலின்பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஜெயராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us