ADDED : மார் 02, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கருவடிக்குப்பத்தில் தனியார் கட்டுமான இடத்தில் லாரி மோதியதில் கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
லாஸ்பேட்டை, ஜீவானந்தபுரம், அன்னை பிரியதர்ஷினி வீதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 70; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை கருவடிக்குப்பம் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சென்டரிங் சீட் ஏற்றி வந்த லாரி, சுப்ரமணி மீது மோதியது. காயமடைந்த சுப்ரமணியை அரசு மருத்துமவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்து குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

