/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கன்னியக்கோவிலில் லட்சதீப திருவிழா
/
கன்னியக்கோவிலில் லட்சதீப திருவிழா
ADDED : ஏப் 14, 2025 04:07 AM
பாகூர்:கன்னியக்கோவில் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், 18ம் ஆண்டு லட்ச தீப திருவிழா இன்று (14ம் தேதி) நடக்கிறது.
புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சாந்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 18ம் ஆண்டு லட்சதீப திருவிழா இன்று (14ம் தேதி) நடக்கிறது. அதனையொட்டி, காலை 7.00 மணிக்கு சாந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு மகா திருமஞ்சனம், தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு தட்டு வரிசை வீதியுலா, அதனை தொடர்ந்து, 12:00 மணிக்கு சீதா பிராட்டி சமேத ஸ்ரீராமச்சந்திரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகம் முழுதும் 10,008 விளக்குகள் ஏற்றி லட்ச தீபவிழா நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பெருமாள் (எ) மாறன் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

