/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொழி திணிப்பு போராட்டம் த.வெ.க., எச்சரிக்கை
/
மொழி திணிப்பு போராட்டம் த.வெ.க., எச்சரிக்கை
ADDED : ஏப் 29, 2026 04:39 AM
புதுச்சேரி: சி.பி.எஸ்.இ., போர்வையில் பிரெஞ்சு மொழிக்கு எதிரான போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசு மொழி மற்றும் கலாசாரத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியின் பன்முக கலாசாரத்தைபிரான்சு உடன் மக்கள் இணைத்து பார்க்கின்றனர். இதை மத்திய அரசு ஏற்று பிரெஞ்சு மொழிக்கு எதிரான போக்கை கைவிட வேண்டும். தவறினால், மத்திய அரசின் சூழ்ச்சியை, த.வெ.க., மக்கள் சக்தியோடு முறியடிப்போம். சி.பி.எஸ்.இ., போர்வையில் மறைமுகமாக இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்கு எதிரான நடவடிக்கை ஒருபோதும் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பிரெஞ்சு பாடத்திட்டத்தை நீக்குவதன் மூலம் புதுச்சேரியின் பன்முகத் தன்மையை குறைப்பதை த.வெ.க., கண்டிக்கிறது. ஆகையால், உடனடியாக பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். தவறினால், மக்களை திரட்டி மத்திய அரசுக்கு எதிராக மொழி திணிப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

