/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு துவக்கம்
/
தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு துவக்கம்
ADDED : ஏப் 12, 2025 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய மாணவர் படை, கடற்படை பிரிவு துவக்க விழா நடந்தது.
பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி முதல்வர் கீதா, கமாண்டர் அபய்சிங், நிர்வாக தலைவர் மெர்லின்பாபு, பி.ஐ., பணியாளர்கள் விஷ்வஜித், விகாஷ் ஆகியோர் தேசிய மாணவர் படை, கடற்படை பிரிவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
தலைமை ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

