ADDED : மார் 19, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், நீதிமன்ற வளாத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்க தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், மூத்த வழக்கறிஞர்கள் பாலசுந்தரம், பரிமளம், சண்முகம், தாமோதரன், மாணிக்கம் உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

