/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் அரசு கல்லுாரியில் சொற்பொழிவு
/
தாகூர் அரசு கல்லுாரியில் சொற்பொழிவு
ADDED : பிப் 16, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தாகூர் அரசு கலைக்கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார்.
தமிழ்த்துறை தலைவர் ரேவதி வரவேற்றார். பேராசிரியர் கோவலவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, புதுச்சேரி பல்கலைக்கழக தமிழாய்வுத் துறை இணை பேராசிரியர் பழனிவேல், தமிழ் மொழி கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், தமிழ் மாணவர்கள் தமிழோடு வேறு துறை பாடங்களை கற்று, வேலை வாய்ப்புகளை பெறலாம் எனப் பேசினார்.
பேராசிரியர் விஜயராணி நன்றி கூறினார்.