/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள்: தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி
/
பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள்: தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி
பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள்: தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி
பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள்: தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி
ADDED : மார் 30, 2026 06:49 PM

பாகூர்: பாகூர் தொகுதியில், இளைஞர்கள், பெண்கள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றுவேன் என தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று பாகூர் நகர பகுதி, அக்ரஹார வீதி, மாஞ்சாலை ரோடு உள்ளிட்ட பகுதியில், வீடு விடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர் 'கடந்த 5 ஆண்டுகளில், பாகூரில் பல முன்னோடி திட்டங்களை செய்து முடித்துள்ளோம். குறிப்பாக, பஸ் நிலையம், உள் விளையாட்டு அரங்கம், ஆரம்ப சுகாதார நிலையங்களை கூறலாம்.
அதுபோல், பல ஆண்டாக சாலை வசதி இல்லாத பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். 7,000 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கி உள்ளோம். பெண்ணையாற்று பெரு வெள்ளத்தால் பாகூர் இருமுறை கடுமையாக பாதித்தபோது, மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியதை மக்கள் நினைவு கூறுகின்றனர்.
பாகூரில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் குளங்கள் துார்வாரி சுத்தம் செய்திட வேண்டும். பெருமாள் கோவில் அமைக்க வேண்டும். இளைஞர்கள், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை கொண்டு வருவேன் எனக்கூறி ஓட்டு சேகரித்தார்.

