/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
/
நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
ADDED : மார் 29, 2026 07:32 PM

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி ஜாபர் பாய் தோட்டம் பகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
நெல்லித்தோப்பு தொகதியில் தே.ஜ., கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் நேற்று ஜாபர் பாய் தோட்டம் மற்றும் முருகன் கோவில் வீதிகளில் வீடு வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் துாவியும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
பிரசாரத்தில் என்.ஆர்.காங்., அ.தி.மு.க.,-பா.ஜ., தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மதியம் நெல்லித்தோப்பு தொகுதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்களை சந்தித்து மரியாதை செலுத்தி ஆதரவு திரட்டினார்.
மாலையில் அண்ணா நகரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தொகுதியை சேர்ந்த மகளிர் குழுவினர்கள் மற்றம் அரசியல் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனை நடத்தினார். அப்போது, தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

