
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவிற்கு சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 12 பேருக்கு தலா 1 லட்சம் கடனுதவி வழங்கினார்.
சங்க மேலாளர் விஜயராகவன், இயக்குநர்கள் தியாகராஜன், சுதாகர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், ஞானசேகரன், சீனுவாசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

