தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த உள்ளாட்சித்துறை ஆலோசனை 

கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த உள்ளாட்சித்துறை ஆலோசனை 

கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த உள்ளாட்சித்துறை ஆலோசனை 


ADDED : பிப் 19, 2025 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ளாட்சித்துறை சார்பில், கொசு ஒழிப்பு மற்றும் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

உள்ளாட்சி துறை துணை இயக்குநர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் ரத்னா, கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியம், நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை ஆணையர் சுரேஷ்ராஜன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ரமேஷ், சதாசிவம், எழில்ராஜன், உதவி பொறியாளர் ராமநாதன், மாநில திட்ட அதிகாரி வசந்தகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா, ஏனாம் நகராட்சி ஆணையர் கந்தவல்லி ராமகிருஷ்ணன் மற்றும் மாகேவை சேர்ந்த அதிகாரிகள் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.

கூட்டத்தில், புதுச்சேரியில் பெருகி வரும் கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாக, அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்காத வகையில், உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் துார்வார வேண்டும். மருந்து தெளித்தல் மற்றும் புகை மருந்து அடித்தல் பணிகள் மூலம், கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை வாய்க்கால், கால்வாய்களை அத்துறையின் மூலம் துாரவார அறிவுறுத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதென ஆலோசித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us