ADDED : நவ 12, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாரம் அவ்வை திடலில் லாட்டரி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி சாரம் அவ்வை திடல் அருகே தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், டி.நகர்., சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, லாட்டரி விற்ற நபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், சாரம், கவிக்குயில் நகர், முருக செட்டியார் நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்த பிரசாந்த்,31; என்பதும், கேரளாவில் விற்பனையாகும் லாட்டரி சீட்டின் கடைசி 3 நம்பர்களை குறித்து கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பிரசாந்திடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 5,050 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.