ADDED : ஜன 21, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, மூலகுளம் ஜே.ஜே.நகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் மூலகுளம் பகுதிக்கு சென்றனர். அங்கு உப்பளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(எ) மனோஜ் 45, என்பவர் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.