/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆடம்பர தேர் பவனி : கவர்னர் பங்கேற்பு
/
ஆடம்பர தேர் பவனி : கவர்னர் பங்கேற்பு
ADDED : ஆக 16, 2025 03:12 AM

புதுச்சேரி: நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் ஆடம்பர தேர்பவனி நேற்று நடந்தது.
நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 174வது ஆண்டு பெருவிழா கொடியேற்றுத்துடன் கடந்த 6ம் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலை இருவேளையும் சிறப்பு திருப்பலி, இரவு சிறிய தேர்பவனி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மாலையில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு தேர்பவனியை தொடங்கி வைத்தார்.
அமைச்சர் ஜான்குமார், ரிச்சர்ட் எம்.எல்.ஏ., மற்றும் கிறிஸ்தவர்கள் திராளனோர் கலந்துகொண்டு வழிப்பட்டனர்.