sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் 5ம் தேதி மகா கும்பாபிேஷக விழா

/

கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் 5ம் தேதி மகா கும்பாபிேஷக விழா

கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் 5ம் தேதி மகா கும்பாபிேஷக விழா

கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் 5ம் தேதி மகா கும்பாபிேஷக விழா


ADDED : மே 28, 2025 12:50 AM

Google News

ADDED : மே 28, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுசாரத்தில் கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகம் வரும் 5ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி, வரும் 1ம் தேதி காலை 8:00 மணிக்கு தேவதா அனுக்ஞை யஐமான அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மாலை 6:00 மணிக்கு ரஹோர்கண ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது.

2ம் தேதி காலை 9:00 மணிக்கு நவக்கிரஹ ஹோமம், மிருச்சாங்கிரஹணம் மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேசபலி நடக்கிறது. 3ம் தேதி காலை 8:00 மணிக்கு மூர்த்தி ஹோமம், ஸம்ஹீதா ஹோமம், திசா ஹோமம், சாந்தி ஹோமம், மாலை 5:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது.

4ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், அனைத்து சுவாமிகளுக்கும் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, விசேஷசந்தி, கன்யா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதிகள் பூஜை, சுமங்கலி பூஜை, பீம்பசுத்தி, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, மாகா பூர்ணாஹூதி நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக வரும் 5ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள், கோ பூஜை, காலை 7:45 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 8:00 மணிக்கு கெங்கை மாரியம்மன் விமான மகா கும்பாபிேஷகம், 8:15 மணிக்கு பாலவிநாயகர், பாலமுருகர் மற்றும் மூலஸ்தானம் மகா கும்பாபிேஷகம், 8:30 மணிக்கு மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு விசேஷ புஷ்பங்கள் மற்றும் மின் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.

ஏற்பாடுகளை கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் விஸ்வநாதன், திருப்பணிக்குழு தலைவர் இளையபெருமாள் தலைமையில் அறக்காவலர் குழுவினர், திருப்பணிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us