/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு
/
மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 16, 2026 06:54 AM
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, நேற்று (16ம் தேதி) சிவன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியையொட்டி, சிவ பக்தர்கள் இரவு முழுதும் கண் விழித்து, கோவில்களில் சிவ நாமத்தை உச்சரித்தபடியே, சிவனை வழிபட்டனர். நிகழ்ச்சியையொட்டி, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது.
எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சாரதாம்மாள் கோவிலில் உள்ள சந்திரமவுலீஸ்வருக்கு, நேற்று மாலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
குருசுகுப்பம் அக்கா சுவாமி சித்தர் கோவிலில், காலையில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
வில்லியனுார் திருகாமீஸ்வரர், பாகூர் மூலநாதர், முதலியார்பேட்டை முத்துக்குமார சுவாமி லாஸ்பேட்டை சிவப்ரமணிய கோவில், சாரம் சிவ சுப்ரமணியர் கோவில், தவளக்குப்பம் அயிற்றுார் மகா தேவர் சிவன் கோவில்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனையில், பொதுமக்கள் பங்கேற்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, பல்வேறு சிவன் கோவில்களில், பக்தி சொற்பொழிவு, பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

