/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லலிதாம்பிகை கோவிலில் 29ம் தேதி மகா யாகம்
/
லலிதாம்பிகை கோவிலில் 29ம் தேதி மகா யாகம்
ADDED : ஜன 27, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி குருமாம்பேட் ஹவுசிங்போர்டு அருகே உள்ள இந்திரா நகரில், ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை கோவில் உள்ளது. வரும் 29ம் தேதி, தை அமாவாசையை முன்னிட்டு, கோவிலில், காலை, 9:00 மணி முதல் 12:00 மணி வரை சிறப்பு மகா யாகம் நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை நடக்கிறது. பக்தர்கள் கலந்து கொண்டு லலிதாம்பிகையை தரிசனம் செய்து,அருளை பெறலாம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஸ்ரீ யோகிலிதா மஹாமேரு டிரஸ்ட் மற்றும் குஹானந்தா நாதர் சாரிடிபில் டிரஸ்ட் செய்து வருகின்றனர்.

