/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகிளா காங்., போராட்டம் நாலே நாலு பேர் பங்கேற்பு
/
மகிளா காங்., போராட்டம் நாலே நாலு பேர் பங்கேற்பு
ADDED : மார் 21, 2024 07:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சிறுமி கொலை வழக்கில் நீதி வழங்க கோரி மகிளா காங்கிரசார் முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உரிய நீதி வழங்க கோரி மகிளா காங்., சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் என அறிவிக்கப்பட்டது.
மகிளா காங்., தலைவி பஞ்சகாந்தி மற்றும் 3 நிர்வாகிகள் மட்டும் தபால் நிலையம் வந்தனர். இரு கடிதங்களை தபால் பெட்டியில் செலுத்திவிட்டு புறப்பட்டனர்.
பெரியளவிலான போராட்டத்தை எதிர்பார்த்து செய்தி சேகரிக்க வந்திருந்த நிருபர்கள், கேமராமேன்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

