/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மார்ச் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
/
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மார்ச் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மார்ச் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மார்ச் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
ADDED : பிப் 22, 2026 06:41 AM

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி சனிப் பெயர்ச்சியையொட்டி மகர வாயில் கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
கும்ப ராசியில் உள்ள சனீஸ்வரர் வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த சனிப் பெயர்ச்சி தோஷத்தில் இருந்து உலக மக்களை காத்திட வேண்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி மகா யாகம் மற்றும் 80 அடி உயர மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது.
இந்த பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். பங்கேற்க விரும்புவோர் ரூ.3,000 ஐ கோவிலில் செலுத்தி தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரம் வேண்டுவோர் சிதம்பர கீதாராம குருக்களை 93454 51655 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

